தெலுங்கானா மந்திரி, மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தெலுங்கானாவில் மந்திரி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநில தொழில்துறை மந்திரியாக இருப்பவர் மல்லா ரெட்டி. அவருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த வாரம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து மந்திரி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். மேலும் டாக்டர்கள் பரிந்துரையின்பேரில் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘நான் நலமாக உள்ளேன். எனக்கு நோய் அறிகுறி எதுவும் இல்லை. உடலநலக்கோளாறும் இல்லை. இருப்பினும் தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்கள் தைரியமாக இருக்க வேண்டும். கவலைப்படக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story