ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மேலும் 10,820 பேருக்கு தொற்று உறுதி


ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மேலும் 10,820 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 9 Aug 2020 2:42 PM GMT (Updated: 9 Aug 2020 2:42 PM GMT)

ஆந்திராவில் இன்று மேலும் 10,820 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

ஆந்திர மாநிலத்தில் கடந்தி சில நாட்களாகவே மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஆந்திராவில் இன்று 10,820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,27,860 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 97 உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,036 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 1,38,712 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 87,112 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story