காஷ்மீரில் தொடரும் பயங்கரவாதிகள் அராஜகம்; பா.ஜ.க. மாவட்ட தலைவர் உயிரிழப்பு


காஷ்மீரில் தொடரும் பயங்கரவாதிகள் அராஜகம்; பா.ஜ.க. மாவட்ட தலைவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 10 Aug 2020 4:16 AM GMT (Updated: 10 Aug 2020 4:16 AM GMT)

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது நஜார் உயிரிழந்து உள்ளார்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் புத்காம் மாவட்ட பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான முன்னணி தலைவராக இருந்தவர் அப்துல் ஹமீது நஜார்.  காலையில் நடைபயிற்சி சென்ற இவர் மீது பயங்கரவாதிகள் நேற்று திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த நஜார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.

சமீப காலங்களாக காஷ்மீரில் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது அதிகரித்து வருகிறது.  கடந்த 6ந்தேதி பா.ஜ.க. பஞ்சாயத்து தலைவர் சஜத் அகமது கான்டே என்பவர் குல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில் பலியானார்.

கடந்த ஜூலயில் பா.ஜ.க.வின் முன்னாள் பந்திபோரா தலைவர் வாசிம் பாரி, அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகிய 3 பேர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.  இதில் அவர்கள் 3 பேரும் உயிரிழந்து விட்டனர்.

இந்நிலையில் மற்றொரு பா.ஜ.க. மாவட்ட தலைவர் பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு பலியாகி உள்ளார்.

Next Story