கொரோனா பாதிப்பு குறைவது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி - பிரதமர் மோடி


கொரோனா பாதிப்பு குறைவது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி -  பிரதமர் மோடி
x
தினத்தந்தி 11 Aug 2020 8:58 AM GMT (Updated: 11 Aug 2020 8:58 AM GMT)

கொரோனா பாதிப்பு குறைவது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று முதல்-மந்திரிகள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

புதுடெல்லி,

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நோய் பாதிப்பு அதிகம் உள்ள, தமிழகம் உள்பட 10 மாநில முதல்வர்களுடன், இன்று காலை பிரதமர் மோடி, காணொலி வாயிலாக, ஆலோசனை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு பணிகளில் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில், மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், டில்லி, உத்திர பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, குஜராத், பீகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த 10 மாநிலங்களில், கொரோனா நோய் பரவலை தடுக்க, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அந்தந்த மாநில முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.

இந்த கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உத்தர பிரதேச முதல்வர் யோகி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மத்திய பிரதேச முதல்வர் உத்தவ் தாக்கரே, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதாவது:-

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. நம்பிக்கை அதிகரித்து அச்சம் குறைகிறது. .கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாநிலங்களின் பங்கு இன்றியமையாதது.  கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகம் பாதித்த மாநிலங்கள் பேசும் போது தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும்.

கொரோனா தடுப்பு-சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறோம். சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர்.

கோவிட் -19 பரவல் நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது-புதிய சூழலும் உருவாகிறது. கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாநிலமும் போராடி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கும் மிகவும் முக்கியமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story