கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா
கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளை கொரோனா தொடர்ந்து தாக்கி வருகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.சி.க்கள் என 30க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.
அவர்களில் கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா (வயது 72) சிறுநீர் பாதையில் ஏற்பட்ட தொற்றுக்கு சிகிச்சை பெற கடந்த 3ந்தேதி மருத்துவமனைக்கு சென்றார். இதில், அவருக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் பாதிப்பு இருப்பது உறுதியானது. தொடர்ந்து 10 நாட்கள் மேற்கொண்ட சிகிச்சையின் பலனாக கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளார்.
அவருக்கு 2 முறை நடந்த பரிசோதனையில் பாதிப்பு இல்லை என முடிவுகள் வந்தன. இதனையடுத்து அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், தொடர்ந்து ஒரு வாரம் வரை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளும்படி மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story