மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 9,115 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 9,115 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தினமும் அதிகரித்தே வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமலும், எந்தவித பாகுபாடுமின்றியும் எல்லாரும் கொரோனா தொற்று ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மராட்டியத்தில் இன்று மேலும் 11,813 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,60,126 ஆக உய்ர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று அதிகபட்சமாக மேலும் 413 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,063 ஆக உயர்ந்துள்ளது
மேலும் மாநிலம் முழுவதும் இன்று ஒரேநாளில் 9,115 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,90,958 ஆக உள்ளது. தற்போது வரை 1,49,798 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story