இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,533 -பேருக்கு கொரோனா தொற்று


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  64,533 -பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 14 Aug 2020 4:22 AM GMT (Updated: 14 Aug 2020 4:22 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று  பரவல் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. மராட்டியம், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிக காணப்படுகிறது. 

 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  64,533 --பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல்,  1007 -பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  24,61,191  -ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 48,040 - ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன்  6,61,595 - பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.  17,51,556- பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 


Next Story