கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மேலும் 7,908 பேருக்கு தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 7,908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு முதலில் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது. குறிப்பாக மாநிலத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கயும் அதிகரித்து வருவதால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று கர்நாடகாவில் மேலும் 7,908 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,11,108 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,717ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,940 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,28,182 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 79,201 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story