மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா


மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Aug 2020 4:34 PM GMT (Updated: 23 Aug 2020 4:34 PM GMT)

மத்திய பிரதேசத்தில் மாநில சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போபால்,

மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை மந்திரி  பிரபுராம் சவுத்ரிக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து  தனது டுவிட்டரில் பிரபுராம் சவுத்ரி பதிவிட்டிருப்பதாவது::  

எனக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியாகி உள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். மக்கள் சேவையாற்ற உங்கள் பிரார்த்தனைகளுடன் மீண்டு வருவேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அமைச்சர்கள் கோபால் பார்கவா, விஸ்வாஸ் சாரங், அரவிந்த் பதோரியா, துளசிராம் சிலாவத், மோகன் யாதவ், ரம்கேலவன் படேல் ஆகியேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. 


Next Story