தலைமைக்கு எழுதிய கடிதம் : குலாம் நபி ஆசாத்துக்கு காங்கிரசுக்குள் அதிகரிக்கும் நெருக்கடி


தலைமைக்கு எழுதிய கடிதம் : குலாம் நபி ஆசாத்துக்கு காங்கிரசுக்குள் அதிகரிக்கும் நெருக்கடி
x
தினத்தந்தி 29 Aug 2020 8:52 AM GMT (Updated: 29 Aug 2020 8:52 AM GMT)

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தை அக்கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

லக்னோ

காங்கிரசுக்கு முழு நேர தலைவர் தேர்வு செய்ய வேண்டும்உம்,காங்கிரஸ் அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 பேர் அண்மையில் கடிதம் எழுதியிருந்தனர்.

இது தொடர்பாக காரிய கமிட்டியில் காரசார விவாதம் நடைபெற்றது. இதன் பிறகும் கூட காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரை உட்கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்று குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார். காங்கிரஸ் அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கும் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமரவேண்டும் என கூறி உள்ளார்.

இந்நிலையில் உத்தர பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் நசீப் பதான், கட்சி விரோத செயலில் ஈடுபடும் ஆசாத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Next Story