ராஜஸ்தானில் இன்று 1,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ராஜஸ்தானில் இன்று 1,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 29 Aug 2020 5:04 PM GMT (Updated: 29 Aug 2020 5:04 PM GMT)

ராஜஸ்தானில் இன்று 1,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ராஜஸ்தானில் இன்று 1,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜஸ்தானில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,777 ஆக அதிகரித்துள்ளது.

ராஜஸ்தானில் இதுவரை 1,030 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தற்போது 14,776 பேர் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story