மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம்- உச்ச நீதிமன்றம்


மூத்த வழக்கறிஞர்  பிரஷாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம்- உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 31 Aug 2020 6:54 AM GMT (Updated: 31 Aug 2020 6:54 AM GMT)

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் ஒரு ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

புதுடெல்லி,

 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் செயல்பாட்டை விமர்சித்து சமூக செயற்பாட்டாளரும் மற்றும் மூத்த வக்கீலுமான பிரசாந்த் பூஷண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டார். இது கோர்ட்டை அவமதிக்கும் செயல் எனக்கூறி அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என கடந்த 14-ம் தேதி  உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு மீண்டும் கடந்த 20-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது தன்னுடைய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி பிரசாந்த் பூஷண் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.  இதனிடையே மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் மீது தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அவருக்கான தண்டனை குறித்த தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விவரத்தை இன்று வெளியிட்ட உச்ச நீதிமன்றம்,   பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் இந்த அபராத தொகையை செலுத்த வேண்டும் இல்லாவிடில் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்  அல்லது  3  வருடம் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Next Story