காஷ்மீரில் லஷ்கர் இ தைபா இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் கைது


காஷ்மீரில் லஷ்கர் இ தைபா இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Sep 2020 5:35 PM GMT (Updated: 11 Sep 2020 5:35 PM GMT)

ஜம்மு மற்றும் காஷ்மீரில் லஷ்கர் இ தைபா பயங்கரவாத இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

காஷ்மீர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் லஷ்கர் இ தைபா என்ற பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 2 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து வெடிகுண்டு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.  அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் தாக்குவதும், படை வீரர்கள் பதிலடி கொடுத்து என்கவுண்ட்டரில் ஈடுபடுவதும் நடந்து வந்த நிலையில், சமீப காலங்களாக காஷ்மீரில் பயங்கரவாத இயக்க நபர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்து உள்ளது.

Next Story