ஆந்திராவில் மேலும் 9,901 பேருக்கு கொரோனா பாதிப்பு


ஆந்திராவில் மேலும் 9,901 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 12 Sep 2020 12:46 PM GMT (Updated: 12 Sep 2020 12:46 PM GMT)

ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் 9,901 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 9,901 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,57,587 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 67 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,846 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 95,733 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 10,292 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை 4,57,008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story