கேரளாவில் புதிய உச்சம்; ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா


கேரளாவில் புதிய உச்சம்;  ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 Sep 2020 2:28 PM GMT (Updated: 26 Sep 2020 2:28 PM GMT)

கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் அங்கு 7,006 - பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில்  3,199-பேர் மீண்டுள்ள நிலையில், 21 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் தொற்று பாதிப்புடன் 52 ஆயிரத்து 678-பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 530 பேர் மீண்டுள்ளனர். கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று 1,050-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Next Story