மராட்டியத்தில் மேலும் 20,419- பேருக்கு கொரோனா தொற்று


மராட்டியத்தில் மேலும் 20,419- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 26 Sep 2020 4:25 PM GMT (Updated: 26 Sep 2020 4:25 PM GMT)

மராட்டியத்தில் புதிதாக 20,419- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக விளங்கும் மராட்டியத்தில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு, தினம் தினம் புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உள்ளது.  மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 20,419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதேபோல், 430 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 21 ஆயிரத்து 176-ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 16 ஆயிரத்து 450-ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை 35,191-பேர் உயிரிழந்துள்ளனர்.   மராட்டியத்தில் தற்போதைய நிலவரப்படி தொற்று பாதிப்புடன் 2 லட்சத்து 69 ஆயிரத்து 119-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story