கேரளாவில் 2- வது நாளாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு


கேரளாவில் 2- வது நாளாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 27 Sep 2020 3:26 PM GMT (Updated: 27 Sep 2020 3:26 PM GMT)

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 7 ஆயிரத்து 445 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கேரளாவில் ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பு ஏற்படுவது இதுதான் முதல் தடவையாகும். கேரளாவில், 2 வது நாளாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 384 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று  ஒரே நாளில் 3,391 பேர் குணம் அடைந்துள்ளனர். அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில்  21 பேர் உயிரிழந்துள்ளனர். மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் 956 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story