இந்திய-நேபாள எல்லையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிக்கும் பாகிஸ்தான்


இந்திய-நேபாள எல்லையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிக்கும் பாகிஸ்தான்
x
தினத்தந்தி 28 Sep 2020 8:11 AM GMT (Updated: 28 Sep 2020 8:11 AM GMT)

இந்திய-நேபாள எல்லையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எவ்வாறு ஆதரிக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி

இந்திய பாதுகாப்பு முகவர்கள் தயாரித்த சமீபத்திய அறிக்கையில்  இந்திய நேபாள எல்லையில் தீவிர நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. 

அந்த அறிக்கையின்படி, பீகார் எல்லைக்கு அருகில் உள்ள இந்திய-நேபாளத்தில் ஏராளமான மசூதிகள் மற்றும் விருந்தினர் மாளிகைகளுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தாவத்-இ-இஸ்லாமியா என்ற அமைப்பால் நிதியளிக்கப்படுகின்றன, மேலும் இந்த மசூதிகள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளத்தின் தாவத்-இ-இஸ்லாமியா கிளைகளால் நிதியளிக்கப்படும் இந்த நிறுவனத்தின் திட்டத்தின் செலவு ரூ1.25 கோடி என்று அறிக்கை கூறுகிறது.

"ரவுட்டாஹாட், பார்சா, கபிலவஸ்து, சன்சாரி மற்றும் பரா ஆகிய எல்லை மாவட்டங்களில் வந்துள்ள வெளிநாட்டு நிதியுதவி கொண்ட மதரஸாக்கள் மற்றும் மசூதிகள் நேபாளத்தில் தண்டனையின்றி செயல்படும் இந்திய எதிர்ப்பு சக்திகளின் நரம்பு மையங்கள் ஆகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும் போது  பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் தவாத்-இ-இஸ்லாமியா விருந்தினர்களை தங்க வைக்க இரண்டு மாடி விருந்தினர் மாளிகை கட்டப்பட்டிருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த எல்லைப்புற மாவட்டங்களில் வாழுபவர்கள் நேபாளத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் அளிக்கின்றன, இது இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்கும். இந்தோ-நேபாள எல்லையில் இஸ்லாமிய நடவடிக்கைகள் அதிகரிக்கிறது என்று அதிகாரி கூறினார்.
  
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழு லஷ்கர்-இ-தைபாவும் நேபாள எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளை குறிவைத்து உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் மற்றும் பைசாபாத்தில் ஒரு தளத்தை உருவாக்க முயற்சிக்கிறது.


Next Story