கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,538 பேருக்கு கொரோனா


கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,538   பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 Sep 2020 3:06 PM GMT (Updated: 28 Sep 2020 3:06 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக தினம் தினம் புதிய உச்சத்தை கொரோனா பாதிப்பு எட்டியது. நேற்று7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இன்று பாதிப்பு சற்று குறைவாக பதிவாகியுள்ளது.  

கடந்த 24 மணி நேரத்தில் 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 79 ஆயிரமாக உயர்ந்துள்ளது.  மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 21 ஆயிரம் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ள நிலையில் சுமார் 57 ஆயிரம் பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர்.


Next Story