பிரதமர் மோடி இன்று 6 மிகப்பெரிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்


பிரதமர் மோடி இன்று  6 மிகப்பெரிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 29 Sep 2020 2:32 AM GMT (Updated: 29 Sep 2020 2:32 AM GMT)

கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி இன்று உத்தரகாண்டில் 6 மிகப்பெரிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

புதுடெல்லி

உத்ரகாண்டில் கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ், ஆறு பெரிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, இன்று தொடங்கி வைக்கிறார். 

காணொலி வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சியில், கங்கையை நதியை மையமாகக்கொண்டு நடைபெற்ற கலாச்சார வளர்ச்சி, பல்லுயிர்ப் பெருக்கம் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் முதல் அருங்காட்சியகத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து, நாள் ஒன்றிற்கு 26 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடம் கட்டுவது, அரித்துவார்-ஜெக்தீப்பூரில் நாள் ஒன்றிற்கு  27 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடத்தை மேம்படுத்துவது, சரை என்னுமிடத்தில் 18 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடத்திற்கான கட்டுமானம் பணி, உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.


Next Story