உயிரை பணயம் வைத்து பனை மரத்தில் ஏறி இளைஞர் செய்த செயல்... வீடியோ


உயிரை பணயம் வைத்து பனை மரத்தில் ஏறி இளைஞர் செய்த செயல்... வீடியோ
x
தினத்தந்தி 29 Sep 2020 3:05 AM GMT (Updated: 29 Sep 2020 3:05 AM GMT)

பனை மரத்தில் ஏறி நபர் ஒருவர் அதன் விசிறி வடிவ ஓலைகளை வெட்டும் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுடெல்லி

பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையாது. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 எண்ணிக்கை வரையிலான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். பனையேறுதல் என்பது பருவகாலத் தொழில்.

தன் உயிரை பணயம் வைத்து பனை மரத்தில் ஏறி நபர் ஒருவர் அதன் விசிறி வடிவ ஓலைகளை வெட்டும் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மரத்தில் ஏறிய நபர் ஓலைகளை வெட்டியதும் பனை மரம் வலது, இடது என அதன் உயரத்திற்கு ஏற்றவாறு சுற்றி நிற்கும் செயல் பார்ப்பவருக்கே தலை சுற்ற வைக்கின்றது.

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.



Next Story