கேரளாவில் மேலும் 7,354 பேருக்கு கொரோனா தொற்று - முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் மேலும் 7,354 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் மேலும் 7,354 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டுவது இது மூன்றாவது முறையாகும். மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் 61 ஆயிரத்து 791 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் இன்று ஒருநாளில் மட்டும் 3,240 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இன்று 22 பேர் மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை கேஎரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
Related Tags :
Next Story