பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்டதல்ல, திடீரென நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை- நீதிமன்றம் தீர்ப்பு


பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்டதல்ல, திடீரென நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை- நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 30 Sep 2020 7:57 AM GMT (Updated: 30 Sep 2020 7:57 AM GMT)

பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட ஒன்றல்ல, திடீரென நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

லக்னோ

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் மசூதி தீர்ப்பு இன்று லக்னோ சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட  உள்ளது. அயோத்தியில் உள்ள பாப்ரி மஸ்ஜித் 1992 டிசம்பர் 6 அன்று இடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆகின்றன.

அக்டோபர் 5, 1993 அன்று, எட்டு தலைவர்கள் உட்பட 40 பேர் மீது சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இரண்டு வருட விசாரணைக்குப் பிறகு, சிபிஐ ஒரு பெரிய சதி மற்றும் பாபர் மஸ்ஜித் மீது திட்டமிட்ட தாக்குதல் என்று குற்றம் சாட்டி 1996 ஜனவரி 10 அன்று ஒரு துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ 351 சாட்சிகளையும் 600 ஆவணங்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது.

முன்னதாக, இந்த ஆண்டு, அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணையை முடித்த பின்னர், சிஆர்பிசியின் 313 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் அறிக்கைகளையும் பதிவு செய்ய நீதிமன்றம் ஜூன் 4 ஐ நிர்ணயித்தது. 

குற்றம் சாட்டப்பட்ட 32 பேர் விசாரணையில் உள்ளனர். அவர்களில் முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மற்றும் பிற பாஜக தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார் மற்றும் சாக்ஷி மகாராஜ் மற்றும் பலர் உள்ளனர்.

 ஜூலை 24 ம் தேதி, பாஜக மூத்தவர் எல்.கே.அத்வானி தனது அறிக்கையை வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் பதிவு செய்தார், மசூதியை இடிக்கும் சதித்திட்டத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்தார். இட்டுக்கட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகையில் தனது பெயர் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாகும் நிலையில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்சில் ஆஜரானார்கள்.

எல்.கே.அத்வானி உட்பட 6 பேரை தவிர மற்ற அனைவரும் லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.
2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நீதிபதி எஸ்.கே. யாதவ் வாசிக்க தொடங்கினார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து அத்வானி, உமா பாரதி உட்பட குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் வழக்கில் இருந்து விடுவித்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. அளித்து உள்ளது

'குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள், சாட்சியங்கள் திடமாக இல்லை; பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட ஒன்றல்ல, திடீரென நடைபெற்றது. பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருத்து.


Next Story