பீகார் சட்டசபை தேர்தலுக்கு 2 சிறப்பு செலவின பார்வையாளர்கள் நியமனம்
பீகார் சட்டசபை தேர்தலுக்கு 2 சிறப்பு செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
பீகார் சட்டசபை தேர்தல், வருகிற 28-ந் தேதி முதல் தொடங்குகிறது. இதையொட்டி, அந்த தேர்தலுக்கு 2 முன்னாள் இந்திய வருவாய் பணி அதிகாரிகள், சிறப்பு செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மது மகாஜன், பி.ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோரை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது. வாக்காளர்களை கவர இலவசங்கள், பணம், மது உள்ளிட்டவை கொடுக்கப்படுகிறதா என்பதை இவர்கள் கண்காணிப்பார்கள். உளவு தகவல்கள் மற்றும் செயலி மூலம் பெறப்படும் புகார்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வார்கள்.
இவர்களில் மது மகாஜன், கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் சிறப்பு செலவின பார்வையாளராக இருந்துள்ளார்.
Related Tags :
Next Story