நாளை முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு பயண டிக்கெட் பெறலாம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு


நாளை முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு பயண டிக்கெட் பெறலாம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Oct 2020 6:57 AM GMT (Updated: 9 Oct 2020 6:57 AM GMT)

நாளை முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு பயண டிக்கெட் பெறலாம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

புதுடெல்லி

கொரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக ரயில் நிலையத்தில் இருந்து வண்டி புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு 2வது சார்ட் தயாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பழைய முறையை மீட்டெடுக்கும் முயற்சியாக, இனி ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு தொடங்கி 5 நிமிடத்துக்கு முன்பு வரை 2வது சார்ட் தயாரிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் காலியாக உள்ள இருக்கைகளுக்கு டிக்கெட் கட்டணத்தை, ஆன்லைன் அல்லது கவுன்ட்டர்கள் மூலம் பயணிகள் பெறமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Next Story