விதிகளை பின்பற்ற போகிறோமா ?லாக்டவுனிலேயே இருக்க போகிறோமோ? நீங்களே முடிவு செய்யுங்கள்- உத்தவ் தாக்கரே


விதிகளை பின்பற்ற போகிறோமா ?லாக்டவுனிலேயே இருக்க போகிறோமோ? நீங்களே முடிவு செய்யுங்கள்- உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 11 Oct 2020 11:51 AM GMT (Updated: 11 Oct 2020 11:51 AM GMT)

மராட்டியத்தில் 70 முதல் 80 சதவிகிதத்தினருக்கு கொரோனா அறிகுறியில்லாமல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பை,

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மராட்டியம் முதலிடம் வகிக்கிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் தொற்று கட்டுக்குள் வர மறுக்கிறது.

 இந்த நிலையில்,  பொதுமக்களுடன் இணைய வாயிலாக பேசிய  மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கூறியதாவது:- “மராட்டியத்தில்  70 முதல் 80 சதவிகிதத்தினருக்கு கொரோனா அறிகுறியில்லாமல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான பேரில் மருந்துகள் கண்டறியும் வரை முகக்கவசம் மட்டுமே தற்காப்புக் கவசமாக பயன்படுத்த வேண்டும்.  பெருந்தொற்றுக்கு எதிரான போரில்  வெற்றி கொள்ள மக்களின் அர்ப்பணிப்பும், ஈடுபாடும் அவசியம். 

முகக்கவசத்தை அணிய வேண்டுமா, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமா அல்லது கட்டுப்பாடுகளுடனே இருக்க வேண்டுமா? என்பதை  மக்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.  தற்போது துவங்கப்பட்டுள்ள எதுவும் மீண்டும் மூடப்படாது. அதிக அளவு மக்கள் பயணிப்பர் என்பதால் புறநகர் ரெயில் சேவை துவங்க நான் விரும்பவில்லை” என்றார். 


Next Story