‘மன் கி பாத்’: பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்


‘மன் கி பாத்’:  பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்
x
தினத்தந்தி 25 Oct 2020 1:21 AM GMT (Updated: 25 Oct 2020 6:22 AM GMT)

பிரதமர் நரேந்திர மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் 70-வது முறையாக உரையாற்றுகிறார்.

புதுடெல்லி,

கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி,  மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ என்ற இந்த நிகழ்ச்சி, இன்று (25-ம் தேதி)  11 மணிக்கு தொடங்க இருக்கிறது . வானொலியில் மோடி உரையாற்ற உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி. இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் 70-வது முறையாக உரையாற்றுகிறார். தற்போது நாட்டில் பரவியுள்ள கொரோனா பாதிப்பு குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களுடன் உரையாடுகிறார். கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில், பண்டிகை காலம் வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் மோடி வலியுறுத்துவார் எனத்தெரிகிறது. 

அகில இந்திய வானொலி மட்டும் இன்றி தூர்தர்ஷனிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மேலும், பிரதமரின் உரையை, நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமும் கேட்க முடியும். இன்று காலை 11 மணிக்கு, அவரின் இந்த உரை தொடங்குகிறது.


Next Story