இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 45,149 பேருக்கு தொற்று உறுதி


இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 45,149 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 26 Oct 2020 4:19 AM GMT (Updated: 26 Oct 2020 4:19 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 149-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரம் என்ற அளவிலேயே நீடிக்கிறது. இதைப்போல  பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் இன்று புதிதாக 45,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,09,960 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 480 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,19,014  ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 59,105 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,37,229 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 6,53,717 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 10 கோடியே 34 லட்சத்து 62 ஆயிரத்து 778 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாளில் மட்டும் 9,39,309 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

Next Story