பீகார் முதல் கட்ட தேர்தல்- இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது


பீகார் முதல் கட்ட தேர்தல்- இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது
x
தினத்தந்தி 26 Oct 2020 8:25 AM GMT (Updated: 26 Oct 2020 8:25 AM GMT)

முதல் கட்டமாக 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் புதன்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

பாட்னா,

பீகாரில் 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. முதல் கட்டமாக 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும்  புதன்கிழமை  வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இத்தொகுதிகளுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனால், தலைவர்கள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பீகார் முதல் கட்ட தேர்தலில் 1064-வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 35 சதவிகிதம் பேர் இளைஞர்கள் ஆவர். 

Next Story