பீகார் மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி 'புதிய பீகார்' ஒன்றைக் கட்டியெழுப்புமாறு, வாக்காளர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்பு மற்றும் கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சோனியா காந்தி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “ நிதீஷ் குமார் தலைமையிலான தற்போதைய அரசு, மக்களுக்கு நன்மையான திட்டங்களை செயல்படுத்தவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தொழிலாளர்கள், விவசாயிகள் இளைஞர்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறிய சோனியா காந்தி, பீகார் மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி 'புதிய பீகார்' ஒன்றைக் கட்டியெழுப்புமாறு, வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியலில் காலடி எடுத்துவைக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் முடிவு செய்துள்ளார். அதற்கான அறிவிப்பை சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் வெளியிடுகிறார்.
கடந்த ஆறரை ஆண்டுகளில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை உயர்த்தியதன் மூலம் ரூ.19 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.