சசிகலாவின் ஆட்சேபனையை மீறி, அவரை சந்திக்க வந்தவர்களின் விவரங்கள் வெளியீடு


சசிகலாவின் ஆட்சேபனையை மீறி, அவரை சந்திக்க வந்தவர்களின் விவரங்கள் வெளியீடு
x
தினத்தந்தி 2 Nov 2020 12:54 PM GMT (Updated: 2 Nov 2020 12:54 PM GMT)

சசிகலாவின் ஆட்சேபனையை மீறி, அவரை சந்திக்க வந்தவர்களின் விவரங்களை கர்நாடகா பொது தகவல் துறை வெளியிட்டுள்ளது

பெங்களூரு,

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா
ஆர்டிஐ சட்டத்தின் கீழ், தன்னை பற்றிய தகவல்களை மூன்றாவது நபருக்கு வழங்கக் கூடாது என ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.

இதனிடையே,  இந்திய குடிமகனான, தனக்கு ஒரு சிறைக் கைதியின் விடுதலை, அவரை யார் யார் சந்திக்க வருகிறார்கள் என்ற விவரங்களை தெரிந்து கொள்ள உரிமை  உண்டு என்றும் தான் கேட்ட விவரங்களை உடனடியாக கொடுக்க வேண்டும் என பொது தகவல் துறைக்கு சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கடிதம் எழுதியிருந்தார். 

இதை ஏற்றுக் கொண்ட பொது தகவல் துறை, பிப்ரவரி மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை யாரெல்லாம் சிறையில் சசிகலாவை சந்தித்தார்கள் என்பது குறித்து விவரங்களை வழங்கியுள்ளது. 

Next Story