ஜெய்சல்மரில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாட உள்ளதாக தகவல்


ஜெய்சல்மரில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாட உள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 13 Nov 2020 3:19 PM GMT (Updated: 13 Nov 2020 3:19 PM GMT)

பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும், ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில், எல்லை பகுதிக்கு சென்று, அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்.

புதுடெல்லி, 

தீபாவளி பண்டிகையை நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் இணைந்து கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், நடப்பு ஆண்டும் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ஸ்லமர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம் எம் நர்வனே ஆகியோரும் கலந்து கொள்வார்கள் எனத்தெரிகிறது. 


Next Story