கர்நாடகாவில் இன்று 2,154- பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடகாவில் இன்று 2,154-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இன்று அம்மாநிலத்தில் புதிதாக 2,154- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பால் இன்று ஒரு நாளில் மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 60 ஆயிரமாக உள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11,508 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து இன்று ஒரு நாளில் மட்டும் 2,198- பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை 8 லட்சத்து 20-ஆயிரம் பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். கர்நாடகாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் விகிதம் 95.39 சதவீதமாக உள்ளது.
Related Tags :
Next Story