மராட்டியத்தில் இன்று மேலும் 4 ஆயிரத்து 237 பேருக்கு கொரோனா பாதிப்பு


மராட்டியத்தில் இன்று மேலும் 4 ஆயிரத்து 237 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 14 Nov 2020 4:58 PM GMT (Updated: 14 Nov 2020 4:58 PM GMT)

மராட்டியத்தில் புதிதாக 4 ஆயிரத்து 237 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இதில் இன்று மாநிலத்தில் புதிதாக 4 ஆயிரத்து 237 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 17 லட்சத்து 44 ஆயிரத்து 698 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் நோய் பாதிப்பில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில் இன்று மட்டும் 2 ஆயிரத்து 707 பேர் குணமடைந்தனர். இதுவரை மாநிலம் முழுவதும் 16 லட்சத்து 12 ஆயிரத்து 314 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலத்தில் 85 ஆயிரத்து 503 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மாநிலத்தில் புதிதாக 105 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 45 ஆயிரத்து 914 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 92.41 சதவீதமாக உள்ளது. 

Next Story