மராட்டியத்தில் இன்று 2,335- பேருக்கு கொரோனா பாதிப்பு


மராட்டியத்தில் இன்று 2,335- பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 16 Nov 2020 4:25 PM GMT (Updated: 16 Nov 2020 4:25 PM GMT)

மராட்டியத்தில் இன்று 2,335- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று 2 ஆயிரத்து 535 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால்  மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 49 ஆயிரத்து 777 ஆக அதிகரித்துள்ளது.  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 84 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 1 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 18 ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று 60 பேர் உயிரிழந்தனர். இதனால் மராட்டியத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது

Next Story