மேற்கு வங்காளத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து: 6 பேர் பலி
மேற்கு வங்காளத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர்.
மால்டா,
மேற்கு வங்காளத்தில் மால்டா மாவட்டம் சுஜாப்பூர் பகுதியில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலைக்குள் நேற்று காலை 11:30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். காயமடைந்த ஐந்து பேரில் ஒருவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது உயிரிழந்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை தற்போது 6 ஆக உயர்ந்துள்ளது.
கனரக இயந்திரம் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் தீ விபத்துக்கான காரணம் என்றும், இது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க கவர்னர் ஜகதீப் தன்கர் கூறுகையில், “ மாநிலத்தில், சட்ட விரோதமாக வெடிகுண்டு தயாரிக்கப்படுவதை, முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தடுக்க வேண்டும்; பிளாஸ்டிக் தொழிற்சாலை விபத்து குறித்து, பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story