15வது ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
சவுதி அரேபியா தலைமையில் நடைபெறும் 15வது ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றுள்ளார்.
புதுடெல்லி,
சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அகிஸ் தலைமையேற்று நடத்தும் 15-வது ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
“21 ஆம் நூற்றாண்டின் அனைவருக்குமான வாய்ப்புகளை உணர்ந்துகொள்வது” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் தற்போது பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசி வருகிறார்.
Related Tags :
Next Story