மராட்டிய மாநிலத்தில் இன்று 5,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மராட்டிய மாநிலத்தில் இன்று 5,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 21 Nov 2020 3:46 PM GMT (Updated: 21 Nov 2020 3:46 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் இன்று 5,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று புதிதாக 5,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,74,455 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 62 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 46,573 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 16,47,004 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 79,873 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் மராட்டிய தலைநகர் மும்பையில் மட்டும் இன்று 1,092 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இதுவரை 2,51,509 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், அங்கு தற்போது 9,325 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story