மராட்டியத்தில் 5 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு


மராட்டியத்தில் 5 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 23 Nov 2020 4:19 PM GMT (Updated: 23 Nov 2020 4:19 PM GMT)

மராட்டியத்தில் இன்று 4,153 மேலும் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இந்தநிலையில் தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மும்பை, புனேயில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. இதேபோல மாநிலத்தில் தொடர்ந்து 3-வது நாளாக பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியே உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், மராட்டியத்தில் மேலும் 4,153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,84,361 ஆக அதிகரித்துள்ளது.  இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 30 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 46,653 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 3,729 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து இதுவரை 16,54,793 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 81,902 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story