லாலு பிரசாத் யாதவ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி


லாலு பிரசாத் யாதவ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 26 Nov 2020 2:20 PM GMT (Updated: 26 Nov 2020 2:20 PM GMT)

ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாட்னா,

பீகாரின் முன்னாள் முதல்-மந்திரியும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த ஆகஸ்ட் மாதம் உடல்நலக் குறைவால் ராஞ்சி மருத்துவ நிறுவனத்தில்(ரிம்ஸ்) அனுமதிக்கப்பட்டார்.

பின், ராஞ்சி மருத்துவ நிறுவன இயக்குநரின் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த லாலு பிரசாத் யாதவ் இன்று மீண்டும் (ரிம்ஸ்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story