மெஹ்பூபா முப்தி வீட்டுக்காவலில் இல்லை - காஷ்மீர் காவல்துறை விளக்கம்


மெஹ்பூபா முப்தி வீட்டுக்காவலில் இல்லை - காஷ்மீர் காவல்துறை விளக்கம்
x
தினத்தந்தி 27 Nov 2020 12:56 PM GMT (Updated: 27 Nov 2020 12:56 PM GMT)

நானும் எனது மகளும் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளோம் என கூறிய நிலையில் மெஹ்பூபா முப்தி காஷ்மீர் காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது.

ஸ்ரீநகர்

 கடந்த 2 நாட்களாக நானும் எனது மகளும் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளோம். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ள கட்சி பிரமுகரின் குடும்பத்தினரை சந்திக்க செல்லாமல் தடுக்கப்பட்டு உள்ளேன் என காஷ்மீர்  முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி குற்றஞ்ச்சட்டி இருந்தார்.

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக மெஹ்பூபா குற்றம்சாட்டிய நிலையில் காஷ்மீர் காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது அதில் மெஹ்பூபா முப்தி வீட்டுக்காவலில் இல்லை; பாதுகாப்பு காரணங்களுக்காக புல்வாமாவுக்கு செல்ல வேண்டாம் என அவரை அறிவுறுத்தினோம் என கூறி உள்ளது.

Next Story