மராட்டியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்தது


மராட்டியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்தது
x
தினத்தந்தி 27 Nov 2020 5:23 PM GMT (Updated: 27 Nov 2020 5:23 PM GMT)

மராட்டியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்துள்ளது.

மும்பை, 

நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் சமீபகாலமாக நோயின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. ஆனால் சமீப நாட்களாக மீட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் இன்று மராட்டியத்தில் புதிதாக 6 ஆயிரத்து 185 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் மாநிலத்தில் 18 லட்சத்து 8 ஆயிரத்து 550 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மாநிலத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 089 பேர் குணமடைந்து உள்ளனா். இதுவரை மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்து 16 லட்சத்து 72 ஆயிரத்து 627 பேர் குணமாகி ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது வரை மராட்டியத்தில் 87 ஆயிரத்து 969 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மாநிலத்தில் புதிதாக 85 பேர் வைரஸ் நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46,089 ஆக உயர்ந்துள்ளது.

Next Story