கேரளாவில் இன்று 3,966 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கேரளாவில் இன்று 3,966 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 27 Nov 2020 6:02 PM GMT (Updated: 27 Nov 2020 6:02 PM GMT)

கேரளாவில் இன்று புதிதாக 3,966 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று புதிதாக 3,966 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,87,707 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் இன்று 23 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,171 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,21,522 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 63,885 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக, கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story