டெல்லியில் கொரோனா மருந்து வீடு தேடி வரும் - சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின்
கொரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட்டால் டெல்லியில் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாவது அலையாக மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கூறியதாவது:-
கொரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட்ட 3 முதல் 4 வாரங்களில் டெல்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரப் பணியாளர்களின் உதவியுடன் கொரோனா மருந்து வழங்கப்படும் என்று கூறினார்.
மேலும் குறைந்து வரும் கொரோனா பாதிப்புகளின் போக்கை மனதில் கொண்டு இரவு ஊரடங்கு உத்தரவு குறித்து டெல்லி அரசு முடிவு எடுக்கும் என்று சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.
Related Tags :
Next Story