கேரளாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 6,250 பேருக்கு தொற்று உறுதி


கேரளாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 6,250 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 28 Nov 2020 6:29 PM GMT (Updated: 28 Nov 2020 6:29 PM GMT)

கேரளாவில் இன்று மேலும் 6,250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கேரளாவில் இன்று புதிதாக 6,250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,93,957 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 25 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 2,196 ஆக உயர்ந்துள்ளது. இன்று 5,275 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 64,834 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 5,26,797 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story