பஞ்சாப் மாநிலத்தில் இன்று 741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


பஞ்சாப் மாநிலத்தில் இன்று 741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 29 Nov 2020 5:08 PM GMT (Updated: 29 Nov 2020 5:08 PM GMT)

பஞ்சாப் மாநிலத்தில் இன்று புதிதாக 741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சண்டிகர்,

பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று புதிதாக 741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,51,538 ஆக அதிகரித்துள்ளது.

பஞ்சாபில் இன்று 15 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,780 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,38,870 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 7,888 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக, பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story