கேரளாவில் இன்று புதிதாக 3,272- பேருக்கு கொரோனா


கேரளாவில் இன்று புதிதாக 3,272- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 Dec 2020 1:21 PM GMT (Updated: 7 Dec 2020 1:21 PM GMT)

கேரளாவில் இன்று புதிதாக 3,272- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்று புதிதாக 3,272- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் மட்டும் அம்மாநிலத்தில் 4,705- பேர் குணம் அடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 77 ஆயிரத்து 616- ஆக உள்ளது. 

தொற்று பாதிப்புடன் 59 ஆயிரத்து 467- பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று ஒரு நாளில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 441- ஆக உள்ளது.


Next Story