கர்நாடகாவில் உள்ளாட்சி தேர்தல்: முதற்கட்ட வாக்கு பதிவு இன்று தொடக்கம்
கர்நாடகாவில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு இன்று தொடங்குகிறது.
பெங்களூரு,
கர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. கர்நாடகாவில் நடைபெறாமல் உள்ள உள்ளாட்சி தேர்தலை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியானது. இதன்படி முதற்கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெறும். இதற்கான பணிகள் தயாராகியுள்ளன.
இதேபோன்று 2வது கட்ட தேர்தல் வருகிற 27ந்தேதி நடைபெறும். உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டு கட்ட வாக்கு பதிவு முடிந்தபின்னர், வருகிற 30ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதற்கான முடிவுகள் வெளியிடப்படும்.
Related Tags :
Next Story