கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகாவில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது பற்றியும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்தும் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில் முதல்-மந்திரி எடியூரப்பா, சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியதாவது:-
கர்நாடகவில் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுத்தப்படுகிறது. இரவு 10 முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.
Related Tags :
Next Story