ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீச்சு: 3 வீரர்கள் காயம்


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீச்சு: 3 வீரர்கள் காயம்
x
தினத்தந்தி 23 Dec 2020 12:08 PM GMT (Updated: 23 Dec 2020 12:08 PM GMT)

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையினர் மூன்று பேர் காயம் அடைந்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் கந்தெர்பெல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு படையினரை  குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

 இந்தத் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Next Story